தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழங்குடியின மக்களுக்கு வீடுகள் குறும்பர்பாடி, தொட்டலிங்கி கிராமங்களில் கலெக்டர் ஆய்வு

Advertisement

ஊட்டி : வீடு இல்லாத பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டி தருவது தொடர்பாக சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பர்பாடி, தொட்டலிங்கி கிராமங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு அரசின் சார்பில் வீடு கட்டி தருதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பர்பாடி, தொட்டலிங்கி ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமங்களில் கிராமங்களில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராமங்களில் இருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் இக்கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் குறித்தும், வீடு இல்லாத பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது ஊட்டி ஆர்டிஒ., சதீஷ், சோலூர் பேரூராட்சி தலைவர் கவுரி, செயல்அலுவலர் அர்சத், ஊட்டி வட்டாட்சியர் சங்கர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News