தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவிற்காக அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்களில் கலெக்டர் நேரடி ஆய்வு

*அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

Advertisement

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்களில் கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தினார். அப்போது அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் 3ம் தேதி மகா தீப பெருவிழா நடக்கிறது. அதைத்தொடர்ந்து, 4ம் தேதி பவுர்ணமி கிரிவலம் அமைந்துள்ளது.

எனவே வரும் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பக்தர்கள் வருகை தொடர்ந்து இருக்கும் எனவும், இந்த ஆண்டு அதிகபட்சம் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 11 பெரிய மற்றும் 13 சிறிய அளவில் என மொத்தம் 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

மேலும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 4764 சிறப்பு பஸ்கள், 200 தனியார் சிறப்பு பஸ்கள், ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 500 சிறப்பு பஸ்கள், கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 20 சிறப்பு பஸ்கள் உள்பட மொத்தம் 5484 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதையொட்டி, செங்கம் சாலை, திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட இடங்களில் அமையும் தற்காலிக பஸ் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் நேற்று நேரடி ஆய்வு நடத்தினார்.அப்போது குடிநீர் வசதி, கூடுதல் சுகாதார வளாகங்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை ஏற்படுத்த உத்தரவிட்டனர்.

மேலும் மழைக்கான வாய்ப்பு உள்ளதால், மழைநீர் வழியாத வகையில் நிழற்கூடங்கள் அமைக்கவும், எளிதில் மழைநீர் வழிந்து செல்லும் வகையில் பஸ் நிலையங்களில் வசதிகளை செய்யவும் உத்தரவிட்டனர்.

அதோடு, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பக்தர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதற்கான பொது தகவல்களை ஒலிபரப்ப வசதியும் செய்ய வேண்டும் என்றனர்.ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் சதீஷ்குமார், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement