தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளிர்கால டிப்ஸ்

குளிர்காலம் விரைவில் வந்துவிடும். அதிலிருந்து தப்பிப்பது எப்படி?

Advertisement

இதோ டிப்ஸ்

* குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். கோதுமை தவிட்டை மண் சட்டியில் போட்டு வறுத்து, ஒரு வெள்ளை துணியில் போட்டு முடிச்சு போடவும். இதை உடல் பொறுக்கும் சூட்டில் குழந்தைகளின் தலைப்பகுதியில் ஒத்தி, ஒத்தி எடுக்க வேண்டும். மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் ஒத்தடம் தரலாம். நிவாரணம் கிடைக்கும்.

* பனி காலங்களில் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு உதடு கருத்து விடும். இதைத் தவிர்க்க தினமும் உதட்டில் மேசா வெண்ணெய் தடவிக் கொள்ளவும்.

* சருமம் மிகவும் வறண்டு இருந்தால் ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பின் குளிக்கலாம்.

* குளிர்காலத்தில் உறைமோர் விடும்போது, அதனுடன் சிறிது புளி உருண்டையைப் போட்டால் கெட்டியான தயிர் தயார். அல்லது ஹாட்பேக்கில் பாலை ஊற்றி உரை ஊற்றுங்கள். கெட்டியான தயிர் கிடைக்கும்.

* வெளியே செல்லும்போது ஸ்வெட்டர், சா ல்வை அணிந்து செல்வது நல்லது. குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.

* தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு அடுப்பை அணைத்து விடவும். சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டுக் கொண்டால் இதமாக இருக்கும். இருமலும் அடங்கும்.

- விமலா சடையப்பன்

Advertisement