தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை மாணவி கூட்டு பலாத்காரம் கைதான 3 பேரின் செல்போன்கள் ஆய்வு: மோட்டார் அறையில் மேலும் சிலரை சீரழித்தார்களா? போலீஸ் விசாரணை

கோவை: கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 3 பேரின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மோட்டார் அறையில் மேலும் சிலரை பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரணை நடக்கிறது.

Advertisement

கோவையில் கடந்த 2ம் தேதி இரவு விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பியான சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்தி என்ற காளீஸ்வரன், இவர்களது உறவினர் குணா என்ற தவசி ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.

விசாரணையில் மூவரும் விமான நிலையம் பின்புறம் உள்ளஅரசு பாலிடெக்னிக் மதில் சுவரை ஏறி குதித்து உள்ளே பாழடைந்த மோட்டார் அறையில் வைத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. எனவே, அந்த மோட்டார் அறை அவர்களுக்கு பழக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும், மேலும் சிலரை அந்த அறைக்கு அழைத்துச் சென்று சீரழித்திருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அவமானம் கருதி போலீசுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அந்த அறையில் வேறு கைரேகைகள், தடயங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மோட்டார் அறைக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த கும்பலுடன் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சுட்டுப்பிடிக்கப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரின் செல்போன்களை தனிப்படை போலீசார் ஆய்வுக்கு கொடுத்துள்ளனர். அதில், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விவரம் சேகரிக்கப்படுகிறது. அதை வைத்து வேறு யாராவது இவர்களுடன் தொடர்பில் இருந்து குற்றங்கள் செய்து உள்ளார்களா? என்றும், அவர்கள் நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News