தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் காரை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 5வது நபர் கைது

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் காரை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் ஐந்தாவது நபர் கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த 4 பேர் ஏற்கெனவே கைதான நிலையில், விஷ்ணு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement

கடந்த 14ம் தேதி அதிகாலை கோவை மாவட்டம் மதுக்கரை அருகே சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. அந்த காரை வழிமறித்த மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி சித்திக் என்பவரின் காரை மறித்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது காரை வேகமாக இயக்கி கொள்ளையடிக்க வந்த நபர்களிடம் இருந்து தப்பித்தனர்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்கு பத்திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த சமத்துவத்தில் ஈடுபட்டவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளை முயற்சி தொடர்பாக சிவதாஸ், ரமேஷ்பாபு, அஜய்குமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த விஷ்ணு என்ற நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாக உள்ள மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். காரில் ஹவாலா பணம் இருப்பதாக நினைத்து கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement