தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைக்கும் பணியை நிறுத்த கோரி வழக்கு: அறநிலையத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை, மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில் இந்து அறநிலைய துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் மருதமலை, வனப்பகுதிகளில் யானைகள் வழித்தடங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க தடை விதிக்க வேண்டும். நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.

Advertisement

இப்பகுதியில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைப்பதால் வனச்சூழல் பாதிக்கப்பட்டு யானை வழித்தடங்கள் துண்டிக்கப்படும். மேலும் விலங்குகள்-மனித மோதல்கள் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை ஒப்புதல் பெறாமல் இந்த சிலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. எனவே, முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தது.

Advertisement