தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை வழியாக கேரளாவுக்கு வேனில் கடத்திய 2 டன் வெடிபொருட்கள் பறிமுதல்: டிரைவர் கைது தீவிரவாதிகளுடன் தொடர்பா?

மதுக்கரை: கோவை மாவட்டம் மதுக்கரை வழியாக கேரளாவுக்கு ஒரு வாகனத்தில் வெடி பொருட்கள் கடத்தி வருவதாக மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுக்கரை போலீசார் நேற்று அதிகாலை மதுக்கரை எல்என்டி பைபாஸ் ரோட்டில் மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் வேனுக்குள் ஏறி பார்த்தனர். அதில், பெட்டி, பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் இருப்பது தெரியவந்தன.

Advertisement

மொத்தம் 75 பெட்டிகளில் தலா 200 ஜெலட்டின் குச்சிகள் வீதம் 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் இருப்பதும், அவற்றை சேலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் மலப்புரம் ஹரிம்பரா பகுதியை சேர்ந்த சுபேர் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வெடி பொருட்கள் சேலத்தில் எங்கு வாங்கப்பட்டது?, எதற்காக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது? பொருட்களை கடத்தி வரச்சொன்னது யார்?, இவர்களுக்கு பின்னணியில் இருப்பது யார்?, தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement