தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை அருகே மொபட்டில் கடத்திய ரூ.40 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

மதுக்கரை: கோவை அருகே ஸ்கூட்டரில் கேரளாவுக்கு கடத்திய ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை இன்று போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மதுக்கரை வழியாக ஹவாலா பணம், ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை கேரளாவுக்கு கடத்துவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை, கேரள மாநில எல்லையில் உள்ள க.க.சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வேலந்தாவளம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மொபட்டில் ஒருவர் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

Advertisement

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அந்த நபர் வந்த மொபட்டை சோதனை செய்தனர். அப்போது பேப்பர் பண்டலில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தொடர் விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம், தொன்னாட்டு பிரம்பை பகுதியை சேர்ந்த சுதீர் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பணத்தை எங்கிருந்து எங்கு கொண்டு செல்கிறார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement