தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை அருகே நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்

Advertisement

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபா காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சாய்பாபா காலனி அடுத்த கவுண்டம்பாளையம் எரு கம்பெனி பாலம் அருகே இன்று காலை நல்லாம்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் ஜோதிராஜ் என்பவர் தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரில் இருந்து பெட்ரோல் கசிந்ததால், சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அவரிடம் பெட்ரோல் கசிவதாக கூறியுள்ளனர். இதனை அவர் பெட்ரோல் தீர்ந்துவிட்டது என்று எண்ணி காஸ் இணைப்புக்கு மாற்றியுள்ளார். அடுத்த சில நிமிடத்தில் திடீரென காரின் முன் பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதிராஜ் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். அதன் பின்னர் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது.

இது குறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கார் எரிந்து சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News