தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் கோர்ட்டில் மனு

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரை அடையாளம் காட்டுவதற்காக அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். கோவை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சகோதரர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினரான மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.

Advertisement

அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிகிச்சை முடிந்த பின்னர் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இதற்கிடையே கோவை ஜே.எம். 2 நீதிபதி அப்துல் ரகுமான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் வருகிற 19ம் தேதி வரை 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதேபோல பாதிக்கப்பட்ட மாணவி, அவரது காதலனிடம் வடக்கு ஆர்டிஓ ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், மாணவி முன்பு கைது செய்யப்பட்ட 3 பேரையும் அடையாள அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அடையாள அணிவகுப்பு எங்கு வைத்து நடத்துவது என முடிவு செய்யப்படும். அடையாள அணி வகுப்பு நடந்து முடிந்த பின்னர் காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றனர்.

Advertisement