தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இந்த மாதத்தில் தொடர்ந்து 2வது முறையாக இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அலுவலக இ-மெயில் முகவரியை பார்த்தபோது அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

Advertisement

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்.  பின்னர் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் 2 நுழைவாயில் பகுதி, வாகன நிறுத்துமிடம், புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடத்தின் அலுவலக அறையிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனால் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஏற்கனவே, கடந்த 2ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இந்த மாதத்தில் 2வது முறையாக தற்போது வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கோவை நீதிமன்றத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது. கோவை கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் என முக்கிய இடங்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் போலீசார் மாநகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதேபோல கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள அக்ரானி கடற்படை கணக்குப்பிரிவு அலுவலகத்துக்கும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. கோவையில் தொடரும் இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement