தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை அருகே 2 சோதனைச்சாவடிகளில் சாணி எடுத்து செல்ல ரூ.1000 லஞ்சம்: 3 வன காவலர்கள் கைது

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் மாங்கரை மற்றும் ஆனைக்கட்டி ஆகிய இடங்களில் 2 வன சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் வன காவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடந்த சில நாட்களாக அதிக அளவில் புகார்கள் சென்றது. இதையடுத்து அந்த 2 சோதனைச்சாவடிகளிலும் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீசார் 2 குழுக்களாக பிரிந்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

Advertisement

இந்தநிலையில் மதுக்கரை அருகே குரும்பபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவர் தனது தோட்டத்தில் இருந்து மாட்டுச் சாணத்தை டிப்பர் லாரியில் ஏற்றிக்கொண்டு நேற்று காலை ஆனைக்கட்டி அடுத்துள்ள அட்டப்பாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

மாங்கரை வனத்துறை சோதனைச்சாவடிக்கு அவர் வந்தபோது, அங்கு பணியில் இருந்த வனக்காவலர் செல்வகுமார் என்பவர் கிருஷ்ணமூர்த்தியின் லாரியை நிறுத்தினார். தொடர்ந்து அந்த வழியாக மாட்டுச் சாணம் எடுத்துச் செல்ல ரூ.1000 லஞ்சமாக கேட்டு வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வனக்காவலர் செல்வக்குமாரை மடக்கி பிடித்தனர். இதேபோல் ஆனைக்கட்டி சோதனைச்சாவடிக்கு கிருஷ்ணமூர்த்தி சென்றபோது, அங்கு இருந்த வன காவலர் சதீஷ்குமார் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் லாரியை தடுத்து நிறுத்தி ரூ.1000 லஞ்சமாக வாங்கியுள்ளனர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வனக்காவலர்கள் இருவரையும் பிடித்தனர். இவ்வாறு 3 வன காவலர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள ஏற்காடு வனச்சரக சோதனைச்சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளர் ராம்குமார் என்பவர், ஒரு லாரி டிரைவரிடம் இருந்து பணம் பெறுவதை போன்ற வீடியோ வைரலானது. உரிய அனுமதியின்றி மர லோடு ஏற்றி வந்த அந்த லாரி டிரைவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, கீழே செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் அடிப்படையில், ஏற்காடு வனக்காப்பாளர் ராம்குமாரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News