தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 38.67 அடியாக உயர்வு..!!

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவை மக்களின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணையில் நீர் இருந்தால் மட்டுமே கோவையில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கோவையின் மேற்கு பகுதி, டவுன் பஞ்சாயத்து, கிராம ஊராட்சிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.
Advertisement

இந்த நிலையில், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்திற்குள்ளாகவே 27.5 அடி உயர்ந்துள்ளது. நேற்று பொழிந்த அடைமழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் என்பது 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35.35 அடியாக இருந்த நிலையில் தற்போது இன்று காலை நிலவரப்படி 38.67 அடியாக உயர்ந்துள்ளது. நேற்றையதினம் 4 அடி உயர்ந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்துள்ளது.

மழை பொழிவை பொறுத்தவரையில் சிறுவாணி அணைகட்டுப்பகுதிகளில் சீராக மழை பொழிந்து வருவதன் காரணமாக நீர்மட்டம் உயந்து கொண்டு வருகிறது. குறிப்பாக அணைக்கட்டு பகுதியில் 9 செ.மீ மழையும், அடிவாரத்தில் 7 செ.மீ மழையும் மொழிந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி சிறுவாணி அணை நீர்மட்டம் 11.32 அடியாக இருந்த நிலையில் இன்று 38.6 அடியாக உயர்ந்துள்ளது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரையறுக்கப்பட்ட 45 அடி கொள்ளளவை அடுத்த வாரத்திற்குள் சிறுவாணி அணை எட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News