தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு.. ரூ.1010 கோடியை இழந்த மக்கள்: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை!!

கோவை: கோவையில் ஆன்லைன் முன்பதிவு பணத்தை திரும்பப் பெறும் மோசடி அதிகரித்து வருவதாக பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூரை சேர்ந்த 60 வயது மூதாட்டியிடம் ஆன்லைன் மூலம் ரூ.18 லட்சம் மோசடி செய்துள்ளதாக சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது. மூதாட்டி ஆன்லைன் மூலமாக ஓட்டல் அறை ஒன்றை புக் செய்துள்ளார்.

Advertisement

இதையடுத்து மூதாட்டி அறையை ரத்து செய்து, முன்பதிவு பணத்தை திரும்பப் பெற இணையதளத்தை தேடியபோது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கூறி ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை உள்ளீடு செய்துள்ளார். இதையடுத்து சில மணி நேரங்களிலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 லட்சத்தை இழந்தார். இது தொடர்பாக மூதாட்டி கோவை சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், முன்பதிவுகளை ரத்து செய்த பிறகு பணத்தை திரும்ப பெறுபவர்களை குறிவைத்து சைபர் கிரைம் மோசடி செய்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 7 மாதத்தில் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் ரூ.1,010 கோடியை இழந்தனர். சைபர் கிரைம் மோசடி தொடர்பாக கடந்த 7 மாதத்தில் 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சைபர் கிரைம் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.314 கோடியை தமிழக சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். டிஜிட்டல் கைது மூலமாக பொதுமக்கள் ரூ.97 கோடியை இழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement