தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவர்களுக்கு உணவு கொடுத்த காவலாளி மீது தாக்குதல்

பெ.நா.பாளையம், டிச. 12: கோவை கவுண்டம்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ரவி (43). இவர், சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாதுகாவலராக வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, துடியலூர் வாரச்சந்தை பகுதியிலுள்ள மூன்று முதியவர்களுக்கு சாப்பிடுவதற்காக உணவு கொடுத்துள்ளார். இந்தப் பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யாசகம் கேட்கும் ஒரு சிலர் தங்கி உள்ளனர். ரவி உணவு கொடுக்கும்போது அங்கிருந்த சிறுவர்கள் அவரிடம் உணவு கேட்டுள்ளனர். அதற்கு அவர் உணவு தீர்ந்து விட்டது.

Advertisement

நாளைக்கு கண்டிப்பாக உங்களுக்கு கொண்டுவந்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த ராமகிருஷ்ணன் (24) என்பவர், ஏன் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவில்லை என்றுகேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ரவியுடன் வந்த அவரது நண்பர் பிரின்ஸ், சமாதானம் செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், கீழே கிடந்த தடியை எடுத்து இருவரையும் தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக ரவி துடியலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement