தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்சத்தில் கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.256க்கு ஏலம்: விவசாயிகள் மகிழ்ச்சி

Advertisement

பழநி: பழநியில் கொப்பரை தேங்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று கிலோ ரூ.256க்கு ஏலம் போனது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஆயக்குடி, கணக்கன்பட்டி, மானூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தென்னந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்களை, விவசாயிகள் பழநியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கொப்பரை ஏல மையத்திற்கு கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். இதன்படி, நேற்று ஏராளமான விவசாயிகள் 10.50 டன் கொப்பரை தேங்காய்களை ஏலம் விடுவதற்கு கொண்டு வந்தனர்.

திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, பழநி சரக துணைப்பதிவாளர் செந்தில்வேல் பாண்டியன் ஆகியோர் கொப்பரை தேங்காய்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து நடந்த ஏலத்தில் 1 கிலோ கொப்பரை தேங்காய் ரூ.256.10க்கு ஏலம் போனது. ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.120க்கு ஏலம் போன கொப்பரை தேங்காய் தற்போது ரூ.256.10க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே கொப்பரை தேங்காய் விலை உச்சத்தில் உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு விலை குறைவாகவும், பணம் தாமதமாகவும் கிடைக்கும். கொப்பரை ஏல மையத்தில் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைப்பதுடன், உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது’’ என்றனர்.

Advertisement

Related News