தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொச்சி விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி கஞ்சா பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வியட்நாமில் இருந்து கடத்திய ரூ. 6.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கலப்பின கஞ்சாவை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தாய்லாந்து, வியட்நாம், ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கொக்கைன், உயர்ரக கலப்பின கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் பெருமளவு கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுப்பதற்காக சுங்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

ஆனாலும் போதைப் பொருள் கடத்தல் குறையவில்லை. இந்தநிலையில் இன்று அதிகாலை பாங்காக்கில் இருந்து கொச்சிக்கு ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் விமானநிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது பேக்கை பரிசோதித்தனர்.

இதில் அந்த பேக்கில் சிறிய சிறிய பாக்கெட்டுகளாக ஆறரை கிலோ உயர்ரக கலப்பின கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தப் பயணி உடனடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த அப்துல் சமது என்றும், வியட்நாமிலிலிருந்து பாங்காக் வழியாக அதை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 6.5 கோடி என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News