தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகை இறால் உற்பத்தியாளர்கள் தலையில் இடியை இறக்கும் அமெரிக்கா: 500டன் இறால் இந்தியாவுக்கு திரும்பி வந்ததால் கலக்கம்

நாகை: இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது அமெரிக்க விதித்துள்ள 50% வரியால் நாகை மாவட்டத்தில் இறால் உற்பத்தி தேக்கம் அடைந்திருக்கிறது. அண்மையில் அனுப்பப்பட்ட 500 டன் இறால் அமெரிக்கவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு இருப்பது இறால் உற்பத்தியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் இன்னும் 40 நாட்களில் இறால் சேகரிப்பு தொடங்கவுள்ள சூழலில், அமெரிக்கவின் வரி விதிப்பால் இறால் உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு எதிர்நோக்கியுள்ளனார். தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியில் நாகை மாவட்டம் முதல் இடத்தில உள்ளது. அத்துடன் பெரிய இறால்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் நாகப்பட்டினம் உள்ளது.

Advertisement

இறால்களை கொள்முதல் செய்யும் நான்கு நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைப்பதால் போதிய விலை கிடைப்பதில்லை என்பது உற்பத்தியாளர்களின் நீண்டகால புகார் ஆகும். கொச்சியில் இயங்கும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இறால் உற்பத்தியாளர்களுக்கு உதவாமல் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின் கட்டணம் மற்றும் இடு பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இறால் உற்பத்தியாளர்களுக்கு, அமெரிக்கவின் 50% வரிவிதிப்பு பேரிடியாக விழுந்துள்ளது. அமெரிக்காவை காரணம் காட்டியே ஏற்றுமதியாளர்கள் விலை வீழ்ச்சி ஏற்படுத்துவார்கள் என்ற கவலையும், உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

Related News