தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரத்தில் 2 நாள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை: போலீசார் வாகன தணிக்கை

Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இன்று முதல் கடலோர பாதுகாப்பு படையின் சீ விஜில் எனும் 2 நாள் கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி துவங்கியது. இதைத் தொடர்ந்து, இசிஆர் சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடலோர பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டது. மேலும், கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து அடிக்கடி கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, மாமல்லபுரத்தில் இன்று காலை ‘சீ விஜில்’ எனும் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு 2 நாள் ஒத்திகை பயிற்சி துவங்கியது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி கடலோர காவல்படை எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் படகு மூலம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். மேலும், கடலுக்கு சென்று மீன்பிடித்து திரும்பிய மீனவர்களின் படகுகளையும், அவர்களின் மீன்பிடி வலைகளையும் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், கல்பாக்கம் அணுமின்நிலைய கடல் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர, மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில் முதல் பூஞ்சேரி 4 வழி சாலை சந்திப்பு வரை டிஎஸ்பி டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சட்டம்-ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனையில் சந்தேக நபர்களோ அல்லது வெடிபொருட்கள், ஆயுதங்களோ பிடிபடவில்லை என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Advertisement