தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டுதோறும் கடலரிப்பால் பாதிப்பு அழிக்காலில் ₹4.28 கோடியில் கடலரிப்பு தடுப்புசுவர் திட்டம்

Advertisement

நாகர்கோவில் : ஆண்டுதோறும் கடலரிப்பால் அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்ற அழிக்கால் கிராமத்தில் ரூ.4.28 ேகாடியில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்ட கடலோர பகுதிகள் ஆண்டுதோறும், ஏப்ரல், மே மாதங்களில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடல் சீற்றத்தின்போது கடல் அலைகள் ஊருக்குள் புகுந்துவிடுவதை தடுக்க பல கடற்கரை கிராமங்களிலும் கடலரிப்பு தடுப்புசுவர்கள் போடப்பட்டுள்ளன.

இதில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அழிக்கால் கிராமம் பெரும்பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. அழிக்கால் மற்றும் பிள்ளை தோப்பு பகுதிகளில் கடல்சீற்றம், கள்ளக்கடல் போன்றவற்றால் அடிக்கடி கடல்நீரும், மணலும் இழுத்துவந்து வீடுகளை சூழ்ந்து விடுகிறது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில் மணல் நிரம்பியதால் பல வீடுகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. இந்த பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த பகுதியில் கடல் சீற்றம், கள்ளக்கடல் நிகழ்வுகள் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அழிக்கால் கடற்கரை கிராமத்தில் தூண்டில் வளைவு பணிக்கான அரசாணை பெறப்பட்டு 4 தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் கூறுகையில், ‘அழிக்கால் கிராமத்தை பாதுகாக்கும் வகையில் சேதமடைந்த கடலரிப்பு தடுப்பு சுவரை 560 மீட்டர் நீளத்திற்கு மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.4.28 கோடியில் 2024-25க்கு தரப்படுத்தப்பட்ட விலைப்பட்டியலின்படி மதிப்பீடு தயாரித்து நிர்வாக ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தற்போது அந்த மதிப்பீடானது தலைமை பொறியாளர், வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம் அலுவலகத்தில் பரிசீலனையில் உள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News