தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டணி கட்சியை சிதைத்து அபகரிப்பதுதான் பாஜ மாடல்: செல்வப்பெருந்தகை சாடல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று இரவு மாவட்ட காங்கிரஸ் சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் சென்றுள்ளார். இத்தனை காலம் ஏன் மணிப்பூருக்கு பிரதமர் செல்லவில்லை? ஏன் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல செல்லவில்லை. இதுதான் அதிகார மமதை என்பது. மணிப்பூர் மாநிலத்தில் இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கி பாஜ தங்கள் திருவிளையாடலை அரங்கேற்றியது.

Advertisement

அதேபோன்ற ஒரு செயலை பாஜ தமிழகத்திலும் நுழைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களின் இந்த செயலுக்கு ஒரு சில கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் வழக்குப்பதிவு செய்வோம், இயக்கத்தை முடக்குவோம், சோதனை நடத்துவோம் என்று மிரட்டுகின்றனர். இதனால் அச்சமடைந்து கைகட்டி வாய் கட்டி எஜமானர்கள் நீங்கள் சொல்வதை செய்வோம் என்று சரணடைந்து கிடக்கின்றனர். பாஜவை தமிழகத்தில் காலூன்ற விட்டால் மணிப்பூர், உத்தரபிரதேசம் போன்ற நிலைமைதான் தமிழகத்திற்கு ஏற்படும்.

பாஜ, அதிமுகவை கூறு போட்டு விட்டது. இதுதான் பாஜவின் மாடல். பாஜவிற்கு எந்த மாநிலத்தில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அந்த கூட்டணி கட்சியை சிதைப்பது அல்லது அபகரிப்பது தான் மாடல். அதிமுகவில் ஏற்படும் பிரச்னையை எடப்பாடி தீர்த்து வைப்பதற்கு பதிலாக அமித்ஷா தீர்த்து வைக்க முயல்கிறார். அப்படி என்றால் அதிமுகவின் உண்மையான தலைவர் யார்? இவ்வாறு பேசினார்.

Advertisement