தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொதுமக்கள் இடையே அதிகரித்துவரும் CNG, PNG பயன்பாடு: செங்கல்பட்டு,காஞ்சிபுரம் குழாய் எரிவாயு இணைப்புக்கு வரவேற்பு

சென்னை: இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குழாய் எரிவாயு இணைப்புக்கு இல்லத்தரசிகள் மாறி வருகிறார்கள். பெட்ரோல், டீசல் மற்றும் LPG எரிவாயுவிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட CNG எனப்படும் இயற்கை எரிவாயு வாகன ஓட்டிகள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது. பெரும்பாலும் ஆட்டோக்கள், வாடகை கார் ஓட்டுநர்கள், CNG -க்கு மாறி வருகின்றன.

இதே இயற்கை எரிவாயு பைப் வழியாக வீடுகளுக்கு வழங்கப்படும் PNG என்ற இணைப்பைப் பெற செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இல்லத்தரசிகள் இடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகளுக்கு அதிக அளவில் PNG இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயன்படுத்த எளிதாகவும், லாபகரமாகவும் இருப்பதாக பயனாளர்கள் கூறுகின்றனர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 5000 வீடுகளுக்கு குழாய் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ள தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 50,000 இணைப்புகளுக்கு விண்ணப்பமும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுவரை 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரும்பு குழாய்களும், 390 கிலோ மீட்டருக்கு தொலைவுக்கு பிளாஸ்டிக் குழாய்களும் பதித்து இந்த நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகித்து வருகிறது. ஒரே இணைப்பில் கேஸ் அடுப்பு, வாட்டர் கீட்டருக்கு எரிவாயு வழங்கப்படுவதோடு போதிய பாதுகாப்பு அம்சங்களும் செய்து தரப்படுவதால், குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் குழாய் எரிவாயு இணைப்புக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.