தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிஎம்டிஏ சார்பில் அயனாவரத்தில் ரூ.6.50 கோடியில் முதல்வர் படைப்பகம்: கட்டிட பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, அயனாவரம் யுனைடெட் இந்தியா நகரில் செயல்பட்டு வரும் பொது நூலகத்தை மேம்படுத்தி, சி.எம்.டி.ஏ. சார்பில் புதிய ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் படைப்பகம் கட்டுவதற்கான பூமிபூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் ,சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பணிகளை தெடாங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, சி.எம்.டி.ஏ. சார்பில் சென்னையில் 30 முதல்வர் படைப்பகங்கள் அறிவிக்கப்பட்டு, 2 முதல்வர் படைப்பகங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

அதன் தொடர்ச்சியாக இன்று அயனாவரம், யுனைடெட் இந்தியா நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் 13,070 சதுர அடியில், தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய புதிய ‘முதல்வர் படைப்பகம்’ அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், மண்டலக் குழுத்தலைவர் ஜெயின், உள்ளாட்சி பிரதிநிதிகள் வே.வாசு, வேதா, மாமன்ற உறுப்பினர் லதா வாசு, துணை இயக்குநர் (பொது நூலகம்) தனலஷ்மி, மாவட்ட நூலக அலுவலர் முனைவர் மு.கவிதா, அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News