தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேகமூட்டமான காலநிலை எதிரொலி குன்னூர் பகுதியில் கொப்புள நோய் தாக்கத்தால் தேயிலைச்செடி பாதிப்பு

*விவசாயிகள் சோகம்
Advertisement

குன்னூர்: மேகமூட்டமான காலநிலை காரணமாக குன்னூர் சுற்று வட்டார பகுதியில் கொப்புள நோய் தாக்கத்தால் தேயிலைச்செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பெரும்பாலும் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், தேயிலை விவசாயத்தை நம்பியே தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் தேயிலையை, விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி, இலாபத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் கடந்த சில நாட்களாக மழையுடன், மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது.

குறிப்பாக மழையுடன் போதிய சூரிய வெளிச்சம் இருந்தால் மட்டுமே பசுந்தேயிலை அரும்பு துளிா்விட்டு மகசூல் அதிகரிக்கும். ஆனால், தற்போது, மேகமூட்டமான காலநிலை நிலவுவதால் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான காட்டேரி, பழத்தோட்டம், பெட்டட்டி போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் தேயிலைச்செடிகளில் கொப்புள நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

பொதுவாக, டிசம்பர் மாதம் முடியும் வரை பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் தேயிலை உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருவதால் இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்துகளுக்கு சுமார் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில், தற்போது பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.30 வரை நல்ல விலை கிடைக்கும் சமயத்தில், தேயிலைச்செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் குன்னூர் பகுதி விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

Related News