தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு இடத்தில் மேகவெடிப்பு: உயிரிழப்பு 33ஆக அதிகரிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் 20 நிமிடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, கங்கன் உள்ளிட்ட இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு ஏற்பட்ட கிஷ்த்வார் மாவட்டத்தில் மீட்புப் பணியில் பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 45 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிஷ்த்வாரில் மேகவெடிப்பால் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்த நிலையில் பஹல்காமிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலில் சிம்லா, கொத்தகை உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராம்பூரில் மேகவெடிப்பால் பெய்த கனழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கொத்தகையில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.