தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேகவெடிப்பால் மதுரையில் நேற்று 13 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததாக வானிலை மையம் தகவல்

 

Advertisement

மதுரை: மதுரையில் நேற்று மாலை திடீர் என கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 4 மணிஅளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒன்றறை மணி நேரத்துக்கு மேலாக கடுமையான கனமழை பெய்தது. மதுரை நகர் பகுதியில் குறிப்பாக மதுரை தல்லாகுளம் இருக்கக்கூடிய பகுதியில் தான் அதிக அளவில் கனமழை பொழிந்தது.

குறிப்பாக சமீப காலமாக மேக வெடிப்பு ஏற்பட்டு அதிக மழை ஒரே இடத்தில் பெய்ய கூடிய நிகழ்வு இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற இந்த சுழலில் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் மேக வெடிப்பு நிகழ்வு நடந்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துருக்கிறார்.

சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட 13 செ.மீ. மழை மதுரை நகர் பகுதியில் பெய்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மதுரை தல்லாகுளம் பகுதியில் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு 12 செ.மீ.அளவில் இந்த மழை பெய்து இருக்கிறது. அதுமட்டும் அல்ல மதுரை சுற்றி இருக்கக்கூடிய மற்ற பகுதியில் குறிப்பாக மதுரை அருகில் இருக்கக்கூடிய புளியம்பட்டி பகுதியில் 8 செ.மீ. வாடிப்பட்டி பகுதியில் 6 செ.மீ. என மதுரை மாவட்ட சுற்று பகுதியில் இருக்கக்கூடிய இடங்களிலும் இந்த கனமழை பெய்து இருக்கிறது.

ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த கனமழை நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர்கள் முழுதாக பெருக்கெடுத்து சாலை முழுதுமாக தேங்கியிருந்தது. அங்கு இருக்கக்கூடிய வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையான சிரமத்துக்குள்ளார்கள்.

Advertisement

Related News