தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரியில் சூழல் சுற்றுலா தலங்கள் மூடல்

 

Advertisement

ஊட்டி: நீலகிரியில் தொட்டபெட்டா, அவலாஞ்சி உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், இன்று மட்டும் சூழல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை துவங்கி 2 மாதங்கள் பெய்யும். இந்த மழை பொதுவாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்க்கும். கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. குறிப்பாக, குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. நேற்று மழை சற்று குறைந்த போதிலும், அதிகாலை நேரங்களில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்தது. இன்று காலை (22ம் தேதி) கடும் மேகமூட்டமும், பரவலாக சாரல் மழையும் காணப்பட்டது.

இதனால், பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரங்களில் வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. மேலும், கடந்த ஒரு வாரமாக கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வரும் நிலையில், குளிரும் அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சூழல் சுற்றுலா தலங்கள் மூடல்: தொட்டபெட்டா, அவலாஞ்சி பகுதிகளில் கனமழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் பாரஸ்ட், 8வது மைல் ட்ரீ பார்க், தொட்டபெட்டா, அவலாஞ்சி, கெய்ர்ன்ஹில் ஆகிய சூழல் சுற்றுலா தலங்கள் இன்று (22ம் தேதி) ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Advertisement