தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.10,000 நோட்டு மாதிரி, கடிகாரம் உள்பட குடியரசு தலைவர்களால் பெறப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம்

புதுடெல்லி: குடியரசு தலைவர்களால் பெறப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசு பொருட்களை குடியரசு தலைவர் மாளிகை ஏலத்துக்கு விடுகிறது. குடியரசு தலைவர் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அளிக்கப்பட்ட பரிசு பொருட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசு பொருட்களை குடியரசு தலைவர் மாளிகை இ-உபஹர் என்ற இணையதளம் வாயிலாக ஏலம் விட்டு வருகிறது.

Advertisement

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி தன் பதவியின் இரண்டாண்டு நிறைவையொட்டி இ-உபஹர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஏலம் நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக ரூ.10,000 நோட்டு மாதிரி, இரட்டைப்பக்க வின்டேஜ் கடிகாரம், ஒரு பாரம்பரிய மிசோ கருவிப்பெட்டி, ஒரு தேசிய சின்ன நினைவுப்பரிசு மற்றும் ஒற்றுமை சிலையின் மாதிரி உள்பட 250க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிற காரணங்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட திட்டங்களுக்கு செலவிடப்படும்” என தெரிவித்தார்.

Advertisement