தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பருவநிலை மாற்றம் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன: ஜெனிவா மாநாட்டில் பொன்குமார் பேச்சு

சென்னை: பருவநிலை மாற்றம் அதனால் தொழிலாளர்கள் மீது ஏற்படும் தாக்கம், அதிலிருந்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்த சர்வதேச மாநாடு ஜெனிவாவில் நடந்தது. இதில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவரும், விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவருமான பொன்குமார் கலந்து கொண்டார். மாநாட்டில் பொன்குமார் பேசியதாவது:

தமிழ்நாட்டில் கடும் வெயிலால் பாதிக்கக்கூடிய தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு பணி நேரத்தில் மாற்றங்களை செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதாவது காலை 11 மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் வெயிலில் வேலை செய்ய தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது என்பதற்கான உத்தரவு.

அதனை தொடர்ந்து இந்த கடும் வெயில் அலையை ஒரு மாநில இயற்கை பேரிடராக அறிவித்து ஆணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியமும் வாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் காங்கிரீட் வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் இலவசமாக வழங்கக்கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கும், தொழிலாளர்களின் பாதிப்புகளை குறைப்பதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி தமிழ்நாட்டில் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related News