தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக நியமனம் கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

Advertisement

சென்னை: சென்னை,தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் மன்னார்குடியை சேர்ந்த தூய்மை பணியாளரின் மகள் துர்கா திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

நகராட்சி ஆணையராக பணி ஆணையை முதல்வரின் கைகளால் வாங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தாலே நாம் நல்ல நிலைக்கு செல்லலாம். நான் அதுபோன்று தான் அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தேன். டி.என்.பி.எஸ்.சி படிக்கும் போதும் அரசால் நடத்தப்படும் இலவச பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து இன்றைக்கு நகராட்சி ஆணையராக பணி ஆணையை பெற்றுள்ளேன். என்னுடைய அப்பா மன்னார்குடி நகராட்சியில் தூய்மைபணியாளராக வேலை பார்த்தவர். அவரது ஒவ்வொரு கஷ்டங்களையும் நான் பார்த்துள்ளேன்.

என்னுடைய அப்பா நல்ல சட்டை போட்டது கிடையாது, நல்ல வேஷ்டி கட்டியதுகிடையாது, நல்ல செருப்பு அணிந்தது கிடையாது. எப்போதும் காக்கி உடையில் தான் இருப்பார். நான் நல்லா இருக்கனும், நல்லா படிக்கனும்; என் பொண்ணு நான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என நினைத்து அதற்காக நிறைய என் அப்பா இழந்துள்ளார். அவர் நல்ல சாப்பாடு கூட சாப்டது கிடையாது. அவர் இந்த தருணத்தில் இருந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும்; அவர் 7 மாசத்திற்கு முன்பு தவறிவிட்டார். இன்றைக்கு நான் நகராட்சி ஆணையராகி உள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்த பேட்டியை கண்டு தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது:

நகராட்சி ஆணையராக பொறுப்பேற்கும் துர்கா அவர்களின் பேட்டியை கேட்டு அகமகிழ்ந்தேன். கல்வி தான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்கு துர்காவே எடுத்துக்காட்டு; நான் மீண்டும் சொல்கிறேன் ‘கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து’

Advertisement