தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூய்மை பணியின் போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சென்னை: சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். பெயிண்டர். இவரது மனைவி கிளாரா (39), திருவான்மியூர் பகுதி 180வது வார்டில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதியினருக்கு சூசைமேரி (18), சுவாதி (13), நிக்கிதாஸ்ரீ (10) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கிளாரா திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான, மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது கீழே கிடந்த 1 பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து நேற்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Advertisement

இந்த செய்தியை அறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிளாராவை குடும்பத்துடன் தனது முகாம் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார். மேலும் புத்தாடையும், திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் வெகுமதியும் வழங்கி, அவரது நேர்மையான பணிக்கு வாழ்த்து தெரிவித்தார். துப்புரவு பணியாளர் கிளாரா குடும்பத்தினருடன் உரையாடிய உதயநிதி ஸ்டாலின், லண்டனில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை அழைத்து, பாராட்டு தெரிவிக்குமாறு தெரிவித்தார் என்றார். தமிழ்நாடு திரும்பியதும், உங்களை நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும், உதயநிதி கூறினார்.

Advertisement