தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி வழக்கில் விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், சுகாதார பணிகளில் சுணக்கமின்றி துாய்மைப்பணியாளர்கள் பணியாற்றினர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள், சுகாதாரமில்லாத சூழலில் பணியாற்றி வரும் நிலையில், நோய்த்தொற்றுக்கான ஆபத்து அதிகமாக உள்ள நிலையிலும் தொடர்ந்து பணியாற்றினர்.
Advertisement

இந்நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி விருதுநகர் தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணை வந்தது. அதில், தூய்மை பணியாளர்கள் மீண்டும் அரசுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தூய்மை பணியாளர்கள் ஊக்கத்தொகை வழங்க கோரி மீண்டும் தனித்தனியே சுகாதாரத்துறை செயலரிடம் மனு வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

 

 

Advertisement

Related News