தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக விருது வென்றது இந்தூர்..!!

Advertisement

டெல்லி: தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் 8வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. தலைநகரங்களின் பிரிவில் சென்னைக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. உலகின் தூய்மையான நகரங்களுக்கான மிக பெரிய சர்வே 9-வது ஆண்டாக இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி, 2024-25 ஆண்டுக்கான, ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையை கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. தூய்மையை நோக்கிய இந்திய நகரங்களின் பயணம் என்பதற்கான வரையறையை குறிக்கும் வகையில் ஸ்வச் சர்வேக்சன் திட்டம் அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 8வது முறையாக தொடர்ந்து முதல் இடம் பிடித்து இந்த பெருமையை தக்க வைத்து கொண்டது. 2வது இடம் சூரத்திற்கும், 3வது இடம் நவி மும்பைக்கும் கிடைத்துள்ளது.

இதேபோன்று இந்தியாவின் பெரிய நகரம் (10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை) என்ற அந்தஸ்து குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு கிடைத்துள்ளது. இதற்காக, குஜராத் அரசு சார்பில் மந்திரி ருஷிகேஷ் பட்டேல் சென்று விருது பெற்று கொண்டார். சூரத் நகருக்கான விருது பெற்ற குஜராத் உள்துறை மந்திரி ஹர்ச சங்கவி பேசும்போது, இதற்காக உழைத்த அனைவருக்கும், குறிப்பிடும்படியாக தூய்மை பணியாளர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மிகப்பெரிய தூய்மையான நகரங்கள் ( 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை)

தூய்மையான நகரம்: ஆமதாபாத், குஜராத்

அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம்: ராய்ப்பூர், சத்தீஸ்கர்

மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்: நவி மும்பை, மஹாராஷ்டிரா

புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்: ஜபல்பூர், மத்திய பிரதேசம்

திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்: சூரத், குஜராத்

தூய்மையான நடுத்தர நகரங்கள் (3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை)

தூய்மையான நகரம்: உஜ்ஜயின், மத்திய பிரதேசம்

அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம்: மதுரா - பிருந்தாவன், உத்தரபிரதேசம்

மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்: சந்திரபூர், மஹாராஷ்டிரா

புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்: ஜான்சி, உத்தரபிரதேசம்,

திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்: லத்தூர், மஹாராஷ்டிரா

தூய்மையான சிறிய நகரங்கள் (1 லட்சம் முதல் 3 லட்சம் மக்கள் தொகை)

தூய்மையான நகரம்: டெல்லி மாநகராட்சி, டெல்லி

அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம்: ஒராய், உத்தரபிரதேசம்

மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்: திருப்பதி, ஆந்திர பிரதேசம்

புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்: திவாஸ், மத்திய பிரதேசம்

திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்: நாகடா, மத்திய பிரதேசம்

தூய்மையான தலைநகரங்கள்

தூய்மையான தலைநகரம்: போபால், மத்திய பிரதேசம்

அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம்: சென்னை, தமிழகம்

மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்: ராஞ்சி, ஜார்க்கண்ட்

புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்: மும்பை, மஹாராஷ்டிரா

திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்: சண்டிகர், சண்டிகர்.

Advertisement