தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவில் சர்வீஸ் விண்ணப்பத்தில் வயது, இடஒதுக்கீடு சான்றிதழ் கட்டாயம்: யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு

Advertisement

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இனிமேல் வயது, இடஒதுக்கீடு சான்றிதழை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி நடத்தி வரும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விதிமுறைகள் கடந்த 22ம் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்புகளின்படி சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, ​​விண்ணப்பதாரர்கள் வயது மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

முன்னதாக, விண்ணப்பதாரர்கள் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் அத்தகைய ஆவணங்கள் பதிவேற்றப்படும். தற்போது முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே உரிய ஆணவங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பிரச்னையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான தகவல்கள், ஆவணங்களை வழங்கத் தவறினால், தேர்வுக்கான விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு 2025 மே 25 அன்று நடைபெறும்.  தேர்வு மூலம் நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை தோராயமாக 979 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 38 காலியிடங்கள் ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News