தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாததால் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

*விழுப்புரத்தில் பரபரப்பு

Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் இருந்து வருகிறது. சில இடங்களில் பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் வழிந்து வீதிகளில் செல்வதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும் பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர்.

இதனிடையே விழுப்புரம் நகராட்சி 8வது வார்டுக்குட்பட்ட திரு.வி.க., வீதி அருகே உள்ள வாணியர் தெரு, தனலட்சுமி நகர், திடீர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்து தெருக்களிலும், குடியிருப்பு பகுதியிலும் தேங்கி பாதித்து வருகிறது. இது குறித்து கவுன்சிலர் நகராட்சி அதிகாரிகளும் பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலர் பத்மாவதி தலைமையில் தக்கா தெரு சந்திப்பில், பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்வதற்கு வந்த நகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு வாகனம் மட்டுமே நகராட்சியில் உள்ளதால், உடனே வந்து அடைப்பை சரிசெய்ய முடியவில்லை என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நகர காவல் நிலைய போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் 8வது வார்டில், கடந்த 4 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்யவில்லை. சாலை சீரமைப்பு, பாதாள சாக்கடை சுத்தம் செய்தல், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எந்த பணிகளும் சரியாக நடக்கவில்லை. இது குறித்து, நகர மன்ற கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் நகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்த பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

Related News