தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சினிமா பிரபலங்களுக்கு போதை பொருட்கள் சப்ளை: நடிகர் சிம்பு மேனேஜரிடம் போலீஸ் விசாரணை

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் போதை ஸ்டாம்ப், ஓஜி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர போதை பொருள் தடுப்பு பிரிவு நுண்ணிறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, கடந்த மாதம் 21ம் தேதி நடிகர் சிம்புவின் முன்னாள் மேனேஜர் சர்புதீன் (44) மற்றும் சென்னை பாடிக்குப்பத்தை சேர்ந்த தியானேஷ்வரன் (25), வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி சரத் (30), சட்ட கல்லூரி மாணவர் முகப்பேர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து போதை பொருள்கள், போதை ஸ்டாம்ப்கள், ஓஜி கஞ்சா மற்றும் ஒரு கார், 27.91 லட்ச ரூபாய், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இந்தநிலையில் சர்புதீன், சரத் ஆகியோரை கஸ்டடியில் விசாரணை செய்வதற்கு எழும்பூர் நீதிமன்றத்தில் திருமங்கலம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை செய்யலாம்’’ என உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று 2 பேரையும் புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் திருமங்கலம் காவல் நிலையத்தில் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது, சர்புதீன், நடிகர் சிம்புவுக்கு மேலாளராக பணியாற்றியதுடன் பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கத்துடன் இருந்துள்ளது பற்றியும் அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருள்கள் சப்ளை செய்துள்ளார் என்பதும் பற்றியும் சினிமா பிரபலங்களுக்கு தனது வீட்டில் போதைப்பொருள் விருந்து வைத்துள்ளது குறித்தும் சரத், இவரது நண்பர்களுக்கு போதைப்பொருள், ஓஜி கஞ்சா சப்ளை செய்துள்ளாரா என்பதும் குறித்தும் சர்புதீன் செல்போனில் யார், யார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பதும் குறித்தும் இணையதளம், இன்ஸ்டாகிராம் பக்கம், பேஸ்புக் ஆகிய தொடர்புகள் குறித்தும் விசாரித்துள்ளனர். இதனிடையே போலீஸ் கஸ்டடி முடிந்ததும் இன்று மாலை மீண்டும் 2 பேரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

Advertisement

Related News