தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சினிமாவை பார்த்து மாணவர்கள் ரவுடிகளாக மாறுகின்றனர்: கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் வேதனை

Advertisement

திருவனந்தபுரம்: இப்போது வரும் வன்முறை காட்சிகள் நிறைந்த சினிமாக்களை பார்த்து பள்ளி மாணவர்கள் கூட ரவுடிகளாக மாறுகின்றனர் என்று கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கடந்த சில தினங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் மோதலில் ஏற்படுவது அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் கொச்சியில் ஒரு பள்ளி மாணவன் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு ராகிங் தான் காரணம் என்று அந்த மாணவனின் தாய் புகார் கூறினார்.

இந்நிலையில் கோழிக்கோட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னித்தலா ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியது: சமீப காலமாக கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. போதைப் பொருளை பயன்படுத்துவதால் தான் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறுகின்றனர். எனவே போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின் முதல்வர் பினராயி விஜயன் பேசியது: சமீப காலமாக வெளியாகும் பல சினிமாக்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. ரவுடிகளை படங்களில் மகான்கள் போல காட்டுகின்றனர். படங்களில் அதிக கொலைகள் செய்பவர் ஹீரோவாக அங்கீகரிக்கப்படுகிறார். அதைப் பார்த்து மாணவர்களும் ரவுடிகளாக மாறுகின்றனர். சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய ஒரு படத்தை பார்த்து சில பள்ளி மாணவர்கள் ரவுடி கோஷ்டியில் சேர்ந்ததாக ஒரு போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தங்களது குழந்தைகளை கவனிக்க பெற்றோரும் மறந்து விடுகின்றனர். கேரளாவில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அரசு வந்த பின்னர் 87,702 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement