தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் ஏமாற்றிய வழக்கில் சினிமா துணை நடிகர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தண்டையார்குளத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் கடந்த 2002-ம் ஆண்டு சென்னையில் சினிமா துறை கேண்டினில் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சினிமா துணை நடிகரான தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் வாயிலாக கருணாநிதி தனது மனைவியான நித்தியகல்யாணிக்கு வேலை தேடிவந்துள்ளார். இதனை அறிந்த தினேஷ் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக மின்வாரியத்தில் வேலை வாங்கிதருவதாக கூறியுள்ளார். இதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளார். அதற்கு முன்பணமாக ரூ.3 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

Advertisement

அதன்படி கருணாநிதி 2002-ம் ஆண்டு பணகுடி அருகே அவரது சொந்த ஊரான தண்டையார்குளத்தில் வைத்து ரூ.3 லட்சம் பணத்தை சினிமா துணை நடிகர் தினேஷ் இடம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்காததால் கருணாநிதி, அது தொடர்பாக தினேஷ் இடம் கேட்டுள்ளார். அவர் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பு தராமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு வள்ளியூருக்கு தினேஷ் வந்திருப்பதை அறிந்த கருணாநிதி தினேஷ்-ஐ செல்போனில் அழைத்து பணத்தி திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஊருக்கு வெளிப்புறமாக வரும்படி அழைத்துள்ளார். அங்கு வந்த கருணாநிதியை தினேஷ் தாக்கிதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இன்று(13-11-2025) தினேஷ்-ஐ பணகுடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Related News