தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிட்கோவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியது

மதுக்கரை : முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியின்போது, குறிச்சி பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது, இங்கு செயல்பட்டு வரும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

கோவையின் முக்கிய, தொழில்முனையமாக செயல்பட்டு வரும் இந்த சிட்கோ தொழிற்பேட்டையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பல கோடி செலவில் மேம்படுத்தியுள்ளது மட்டுமின்றி, இங்கு தங்க நகை தொழில்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கோவை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ பகுதியில் எல்.ஐ.சி. காலனி முதல் சிட்கோ வரை சாக்கடை கால்வாய் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள கழிவுநீர், ரோட்டில் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், இங்கு சுகாதாரம் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் சூழ்நிலை உருவானது.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நீண்டநாள் பிரச்னைக்கு செய்தி வெளியிட்டு தீர்வுகண்ட தினகரன் நாளிதழுக்கு தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement