தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிறிஸ்தவ போதகர்களுக்கு மிரட்டல் பாஜ பிரமுகர் மீது புகார்

அண்ணாநகர்: கிறிஸ்தவ போதகர்களுக்கு மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகர் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றம் பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது, பாஜவை சேர்ந்த சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த யோவான் (29) என்பவர் நேற்று முன்தினம் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு கடந்த 28ம் தேதி நெற்குன்றம் பகுதியில் ஊழியம் செய்வதற்கு சென்றோம். அப்போது எங்களது வாகனத்தை வழிமறித்த பாஜ பிரமுகர் பிச்சாண்டி (எ) ஜென்டில்மேன் மற்றும் சிலர் எங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினர். மதக்கலவரம் தூண்டும் வகையில் எங்களை மிரட்டினர். எங்களை மிரட்டும் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். எனவே கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜ பிரமுகர் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

Advertisement