தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோழவந்தான் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்

*அறுவடை செய்ய வழியின்றி தவிக்கும் விவசாயிகள்

Advertisement

சோழவந்தான் : சோழவந்தான் அருகே மழையால் நெல்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடை செய்ய வழியின்றி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி பகுதியில் பெரியார் பாசனக் கால்வாய் மூலம் நெல் விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது.

பல இடங்களில் நெல் அறுவடைப் பணிகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நெற் பயிர்கள் பல இடங்களில் சாய்ந்து அறுவடை செய்ய வழியின்றி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

இது குறித்து வழக்கறிஞரும், விவசாயியுமான கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘எனது வயலில் செல்லப்பொன்னி வகை நெல் பயிரிட்டேன். நடவு முதல் அறுவடை வரை ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவானது.

இதில் களை புற்கள் அதிகம் வளர்ந்ததால் அதை அகற்ற கூடுதல் செலவானது. இவ்வாறு பல தடைகளைத் தாண்டி அறுவடை செய்யும் வேளையில் மழை பெய்ததால் அனைத்து நெல் கதிர்களும் மண்ணோடு மண்ணாக சாய்ந்து விட்டது.

இதை அறுவடை செய்தாலும் பாதி அளவு தான் மகசூல் கிடைக்கும். சாதாரண நேரங்களில் டயர் வண்டி எனும் சாதாரண அறுவடை இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1500 கூலியில் அறுவடை செய்யலாம்.

அதில் கிடைக்கும் வைக்கோலையும் விற்பனை செய்யலாம். ஆனால் இது போல் மழையால் சாய்ந்த கதிர்களை செயின் வண்டி எனும் இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000 கூலி கொடுத்து அறுவடை செய்ய வேண்டி உள்ளது. இதில் அறுவடை செய்யும் வைக்கோலையும் விற்பனை செய்ய முடியாது.

இதனால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் கிடைக்காத பரிதாப சூழல் உள்ளது. இவ்வாறு செலவழித்த தொகைக்கு கூட மகசூல் கிடைக்காமல் இப்பகுதி விவசாயிகள் அதிகம் நஷ்டமடைந்து உள்ளோம். மற்ற தொழில்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், லாபமும் ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு கிடைக்காமல் பரிதவித்து வருகிறோம். வேளாண்மைத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

Advertisement