தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோழவரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 5000 நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை

 

Advertisement

புழல்: சோழவரம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 4 நாட்களாக 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு, நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள ஈரப்பதத்தில் நெல் கொள்முதலில் ஏற்படும் பிரச்னைகள் தீர்வுகாண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில நாட்களாக விவசாயிகளிடமிருந்து, நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. அறுவடை செய்யப்பட்டு மூட்டைகளை டிராக்டர்களில் கொண்டு வந்து, ஒரு வார காலமாக காத்திருப்பதாகவும், மழையில் நெல்மணிகள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக சுமார் 5000க்கும் மேற்பட்ட மூட்டை நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள், இரவு நேரங்களில் நெல் வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக தமிழ்நாடு அரசு தேக்கமடைந்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement