தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் நடந்த ஏடு எதிரேறிய விழா

*திளரான பக்தர்கள் பங்கேற்பு

Advertisement

சோழவந்தான் : சோழவந்தாமன் அருகே திருவேடகத்தில் உள்ள ஏடகநாதர் கோயிலில், நேற்று வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய விழா சிறப்பாக நடைபெற்றது. சோழவந்தான் அருகே திருவேடகத்தில் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் திருக்கோயில் உள்ளது. ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றும் ஒன்றுசேரக் கொண்டதான வரலாற்று சிறப்பு மிக்க இந்த சிவாலயத்தில் திருப்பாசுர ஏடு எதிரேறிய விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

கி.பி 7ம் நூற்றாண்டில் சைவ சமயத்தைக் காக்கவும், மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் எனும் மன்னரின் வெப்பு நோய் நீங்கவும், திருஞான சம்பந்தர், சமணர்களுடன் ‘அனல் வாதம்’ எனும் சொற்போர் நிகழ்த்தி திருப்பாசுரம் பாடினார். மேலும் புனல் வாதம் புரிய ‘வாழ்க அந்தணர்’ எனும் திருப்பாசுர ஏட்டினை வைகை ஆற்றில் விட்டார்.

இதன்படி மதுரையில் விடப்பட்ட அந்த ஏடு ஆற்றில் எதிர் திசையில் நீந்தி திருவேடகத்தில் நின்று வாதத்தில் வென்றது. இதனால் இவ்வூருக்கு திரு ஏடகம் என பெயராகி பின் அது மருவி திருவேடகம் என வந்தது. அந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டு தோறும் ஆவணி பௌர்ணமி அன்று திருப்பாசுர ஏடு எதிரேறிய விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று காலை நடைபெற்ற விழாவில் கோயிலில் நாயன்மார்களுக்கு அர்ச்சகர் பரசுராமன் குழுவினரால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் விநாயகர், கையில் ஏடு ஏந்திய திருஞான சம்பந்தர், குலச்சிறை நாயனார் ஆகியோர் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் எழுந்தருளினர். இதையடுத்து காலை 11 மணியளவில் சிவனடியார்கள் திருப்பாசுரங்கள் பாட, தங்க முலாம் பூசப்பட்ட ஏடு, அதற்குரிய தனி சப்பரத்தில் வைத்து வைகையாற்றுத் தண்ணீரில் விடப்பட்டது. ஆண்டு தோறும் இரவில் நடைபெறும் இவ்விழா சந்திர கிரகணத்தால், நேற்று காலையில் நடத்தப்பட்டு மதியம் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

தமிழக அளவில் இந்த ஒரு கோயிலில் மட்டுமே இவ்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தக்கார் சேவுகன், செயல் அலுவலர் சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement