தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்தூர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு 4 ஏக்கர் விவசாய நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு

*பெட்ரோல் கேனுடன் மனு அளிக்க வந்த குடும்பத்தினர்

Advertisement

சித்தூர் : 4 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமிற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளிப்பார்கள். அதன்படி நேற்று கலெக்டர் சுமித்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், நில ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும், சுடுகாடுக்கு வழி, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா, சுகாதார வசதி ஏற்படுத்தி தரவேண்டும், கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 347 பேர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

முன்னதாக மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு பெத்த பஞ்சானி மண்டலம், பொட்ட காலனியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மனு அளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தனர். இதனை கண்ட முதலாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஷ்வர் விரைந்து சென்று பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களுக்கு சொந்தமாக நான்கரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நாங்கள் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த இருவர், எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்து கொண்டனர். மேலும். இது தங்களது சொந்தமான நிலம் என கூறி தகாத வார்த்தைகளால் பேசி தாக்க வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த 6 வருடங்களாக வருவாய்த்துறை, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை முறையாக ஆய்வு செய்து நிலத்தை மீட்டு, இருவர் மீது கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதேபோல் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த மனுநீதினால் முகாமில் இணை கலெக்டர் வித்யாதாரி, டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிஷத் முதன்மைச் செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட ஏராளமான மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News