தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்திரை திருவிழா 7ம் நாள்; சுசீந்திரம் கோயிலில் பல்லக்கில் சுவாமி வீதி உலா

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை தெப்பத்திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா காட்சிகள் நடக்கின்றன. இன்று (14ம்தேதி) 7ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை பல்லக்கில் சுவாமி வீதி உலா காட்சிகள் வந்தன. இன்று மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேம், இரவு 9.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. நாளை (புதன்) 8ம் திருவிழாவையொட்டி, காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதியுலா, மாலை 4 மணிக்கு நடராஜ பெருமாள், சிவகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9.30 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடக்கிறது.
Advertisement

9ம் திருவிழாவான 16ம்தேதி (வியாழன்) காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு, அம்பாள் திருவீதியுலா நடக்கிறது. பின்னர் காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் முதல் தேரில் விநாயகர், அம்மன் தேரில் சுவாமி மற்றும் அம்பாள், இந்திரன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. 10ம் திருவிழாவான 17ம்தேதி (வெள்ளி) மாலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8.30 மணியளவில் தெப்பக்குளத்ததில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் எழுந்தருளி 3 முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆறாட்டு நடக்கிறது.

Advertisement

Related News