தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னசேலம் ரயில் நிலையம் அருகே சிக்னல் பழுதால் கேட் திறப்பதில் சிக்கல்

*அணிவகுத்து நின்ற வாகனங்கள், போக்குவரத்து பாதிப்பு

Advertisement

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட சின்னசேலத்தில் பெரிய ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் ஒருபுறம் உள்ள கூகையூர் சாலையிலும், மற்றொரு புறம் நைனார்பாளையம் சாலையிலும் ஒரு ரயில்வே கேட்டும் உள்ளது. இந்த இரண்டு ஊர்களுக்கும் செல்பவர்கள் ரயில் வரும் நேரத்தில் நின்று செல்லும் வகையில் ரயில்வே கேட் மூடப்படுவதும், ரயில் சென்ற பிறகு திறந்துவிடுவதும் வழக்கம்.

இந்த ரயில்வே கேட் மூடுவதும், திறப்பதும் மின்சாரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 11.50 மணியளவில் விருத்தாசலம் டூ சேலம் ரயில் அந்த கேட்டை கடந்து சென்றது. அப்போது ரயில் வருவதை ஒட்டி மூடப்பட்ட ரயில்வே கேட், சிக்னல் பழுதானதால் மீண்டும் திறக்க முடியவில்லை.

இதனால் ரயில் வருவதை ஒட்டி இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இந்த சிக்னல் பழுது சுமார் 30 நிமிடமாக நீடித்தது. இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் கையால் இயக்கி கேட்டை திறந்தனர். இதனால் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது.

Advertisement

Related News