தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதர்மண்டி கிடக்கும் சின்னம்பேடு பெரியஏரி கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: புதர்மண்டி கிடக்கும் சின்னம்பேடு பெரிய ஏரி கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் - சின்னம்பேடு கிராமம் இடைப்பட்ட பகுதியில் ராள்ளப்பாடி, ஜி.ஆர்.கண்டிகை, குமரபேட்டை, பனையஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விளை நிலங்களில் விவசாயிகள் நெல், பூ செடி, கரும்பு போன்றவற்றை பயிர் செய்து வருகிறார்கள். விவசாய தண்ணீர் தேவைக்காக பெரிய பாளையம் பாளேஸ்வரம் பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு சின்னம்பேடு பெரிய ஏரிக்கு கால்வாய் மூலம் அனுப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.
Advertisement

இந்நிலையில் ஏரி கால்வாய் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக புதர்மண்டி தடமே தெரியாமல் மறைந்துவிட்டது, மேலும் கால்வாய் ஓரங்களில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ராள்ளபாடி, பனையஞ்சேரி பகுதிகளில் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே, கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், ”பெரியபாளையம் - பாளேஸ்வரம் பகுதியில் இருந்து சின்னம்பேடு பெரிய ஏரிக்கு செல்லும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால் பெரிதும் பயன்பெறுவோம். தற்போது ஏரி கால்வாய் புதர் மண்டி தூர்ந்துவிட்டது. கடந்த 2 வருடத்திற்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கு செல்லும் கால்வாயை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்தனர். ஆனாலும் புதர்மண்டி காணப்படுகிறது. எனவே, புதர்மண்டி கிடக்கும் சின்னம்பேடு பெரிய ஏரி கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றி தந்தால் பயனாக இருக்கும்” என்றனர்.

Advertisement

Related News