தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40 ஆடுகள் பலி: பட்டியை மூடியதால் தப்பிக்க முடியாத பரிதாபம்

Advertisement

நிலக்கோட்டை: சின்னாளபட்டி அருகே, பருத்திக் காட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பட்டியில் அடைத்து வைத்திருந்த 40 ஆடுகள் கருகி பலியாயின. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சின்னாளபட்டி அருகே உள்ள பித்தளைப்பட்டியைச் சேர்ந்தவர் மெம்மேலி (50). இவர், 300க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும், விவசாய நிலங்களில் ஆட்டுக் கிடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பிள்ளையார்நத்தம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்துவிட்டு, பெரிய ஆடுகளை மட்டும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார். இரவு 7 மணியளவில் ஆடுகளை பட்டிக்கு கொண்டு வந்து அடைப்பார்.

இந்நிலையில், நேற்று காலை 40க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு ஒரு நாயையும் காவலுக்கு வைத்துவிட்டு வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். நேற்று மாலை பட்டி அருகில் உள்ள பருத்திக் காட்டில் தீப்பிடித்து பரவியது. காற்றின் வேகத்தால் பட்டிக்கும் தீப்பிடித்து பரவி எரிந்தது. இதனால், பட்டியில் சிக்கிய ஆட்டுக்குட்டிகள் வெளியே வரமுடியாமல் அங்கும் இங்கும் கத்திக் கொண்டு ஓடின. நாயும் தீயில் சிக்கி ஓலமிட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். ஆனால், பட்டியில் இருந்த 40க்கும் மேற்பட்ட ஆட்டுக் குட்டிகள், நாய் ஆகியவை தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய மெம்மேலி ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Related News