தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லிபாயிண்ட்...

* தந்தை இறப்பு செய்தியால் நாடு திரும்பிய வெல்லலகே

Advertisement

அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் குரூப் பி-யில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை அணி, நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆடியது. அப்போது, இலங்கை அணிக்காக ஆடிய ஆல் ரவுண்டர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்கா காலமானார் என்ற தகவல் வந்தது. அதை அடுத்து, அன்று இரவே விமானம் மூலம் தன் தாய் நாட்டுக்கு வெல்லலகே திரும்பிச் சென்றார். 22 வயதான வெல்லலகே, சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை ஆடும் போட்டியில் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.

* ஆஸி மகளிர் அணிக்கு 10 சதவீதம் அபராதம்

முல்லன்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையே, 2வது ஒரு நாள் போட்டி, முல்லன்பூரில் நடந்தது. அந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, 102 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்காததால் ஆஸி அணிக்கு, போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சர்வதேச நடுவர் குழுவை சேர்ந்த ஜி.எஸ்.லக்‌ஷ்மி இந்த அபராதத்தை விதித்துள்ளார்.

* பாக். அணி மீது ஐசிசி நடவடிக்கை?

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியின்போது, நடுவர் ஆன்டி பைகிராப்ட் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாகிஸ்தான் அணி, மைதானத்துக்கு வர மறுத்தது. அதனால், 1 மணி நேரம் போட்டி தாமதம் ஆனது. இதற்கு இடையில், பாக். அணியினரை பைகிராப்ட் நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பை பாகிஸ்தான் ஊடக மேலாளர் படம் பிடித்துள்ளார். இது, ஐசிசி விதிகளை மீறும் செயல். இதற்காகவும், மேலும் பல விதிமீறல்களில் ஈடுபட்டதற்காகவும், பாக். அணி மீது, ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

Advertisement