தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தை திருமணம் மனித குலத்துக்கு எதிரான குற்றம்: ஒன்றிய அமைச்சர் அன்ன பூர்ணா தேவி வேதனை

புதுடெல்லி: குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவுக்கான 100 நாள் விழிப்புணர்வு பிரசாரத்தின் தொடக்க விழாவில் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்ன பூர்ணா தேவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அன்ன பூர்ணா தேவி, “குழந்தை திருமணம் என்பது சட்டத்தை மீறுவது மட்டுமல்ல, இது ஒரு மகளின் குழந்தை பருவத்தை பறித்து, ஆரம்பகால மகப்பேறு மற்றும் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு துன்பங்களை பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற ஒன்றிய அரசின் முயற்சி மூலம் தற்போது பெண்கள் முன்பை விட வேகமாக முன்னேறி வருகின்றனர். விளையாட்டு, பாதுகாப்பு, சுரங்கத்துறை, விண்வௌித்துறை போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் புதிய வரலாற்றை உருவாக்கி வருகின்றனர். குழந்தை திருமணம் என்பது மனித குலத்துக்கு எதிரான பெரும் குற்றம். குழந்தை திருமணங்களை தடுப்பதில் பூஜ்ய சகிப்பு தன்மையை கடைப்பிடிக்க வேண்டும. இதற்கு மாநிலங்கள், சிவில் சமூக குழுக்கள் மற்றும் பிற தலைவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒரு குழந்தை திருமணத்தை கூட ஏற்க முடியாது” என்றார்.

Advertisement

Advertisement